தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

எம்மவருக்கு ஏது நிம்மதி


யுத்தத்தை வேண்டுமென்றே
எம்மீது சுமையேற்றி
அதிலே குளிர் காய்ந்து
அதிகார சிம்மாசனத்துக்காய்
ஆயிரம் தலை கொய்து
அதன்மீதேறி நின்று
அர்த்தமற்று
சந்தற்பவாத அரசியல் பேசி
மேய்ப்பர்கள் தாமேயென்று
இன்னும் தலையெடுக்க
துணிந்து நிற்பவர்
மனம் மாறும் வரை
எம்மவருக்கு ஏது நிம்மதி!

08.09.2008 "ஜீவநதி" வலைப்பூவில் தோழர் தங்கராசா ஜீவராஜ் பதிவு செய்துள்ள "யுத்தத்தின் முடிவினைத் தேடும் சமாதானத்துக்கான போர்... யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?" எனும் கவிதையைப் பார்த்த போது நானும் பங்கிற்கு ஏதும் எழுதலாமே என்று நினைத்து "எம்மவருக்கு ஏது நிம்மதி" எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.