தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

எம்மவருக்கு ஏது நிம்மதி


யுத்தத்தை வேண்டுமென்றே
எம்மீது சுமையேற்றி
அதிலே குளிர் காய்ந்து
அதிகார சிம்மாசனத்துக்காய்
ஆயிரம் தலை கொய்து
அதன்மீதேறி நின்று
அர்த்தமற்று
சந்தற்பவாத அரசியல் பேசி
மேய்ப்பர்கள் தாமேயென்று
இன்னும் தலையெடுக்க
துணிந்து நிற்பவர்
மனம் மாறும் வரை
எம்மவருக்கு ஏது நிம்மதி!

08.09.2008 "ஜீவநதி" வலைப்பூவில் தோழர் தங்கராசா ஜீவராஜ் பதிவு செய்துள்ள "யுத்தத்தின் முடிவினைத் தேடும் சமாதானத்துக்கான போர்... யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?" எனும் கவிதையைப் பார்த்த போது நானும் பங்கிற்கு ஏதும் எழுதலாமே என்று நினைத்து "எம்மவருக்கு ஏது நிம்மதி" எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.

8 பின்னூட்டங்கள்::

geevanathy said...

நன்றி நண்பரே,
தங்கள் வலைப்பூவில் இணைத்துக்கொண்டதற்கு.
உங்களுடைய இந்த Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

Unknown said...

வருகைக்கும், சுட்டி இணைப்புக்கும் நன்றி த.ஜீவராஜ்.

Anonymous said...

இந்த நிலை என்று மாறுமோ?

Unknown said...

வருகைக்கு நன்றி இனியவள் புனிதா.
//இந்த நிலை என்று மாறுமோ?//???

கவிதையைச் சொன்னீர்களோ தெரியாது!

ஹேமா said...

ஈழவன் காத்துக் காத்துக் காலங்களும், எங்கள் வயதும்தான் கடக்கிறதே தவிர?????

Unknown said...

நன்றி ஹேமா.

மே. இசக்கிமுத்து said...

என்றேனும் ஒரு நாள் நிச்சயம் நிம்மதி கிடைக்கும், நம்பிக்‍கையோடு நாமிருப்போம்!!

Unknown said...

வருகைக்கு நன்றி இசக்கிமுத்து.