"வானம் வெளித்த பின்னும்" வலைப்பூ பதிவர் தோழர் ஹேமாவின் "நீயும் தமிழன் தான்..."எனும் கவிதைக்கு மறுப்புக் கவிதை.
என்ன நியாயம் ?
எமக்காகத் தளம் தந்து
ஈழப் போருக்கு உரமிட்டு
அவசரமென ஆகாயத்தால் வந்து
பூமாலையாய் ஊண் தந்தவர்
இந்திய மக்களே!
கண்ணீர்த்துளி வடிவ இலங்காவின்
தமிழ் வதைப்புக்கெதிராகக் குரலிட்டு
கடவுச்சீட்டின்றி அகதியாய் தடம்பதிக்க
அனுமதி தந்து உயிர் காப்பவரும்
இந்திய மக்களே!
குரல்வளையை நெரிக்க முனைந்ததால்
குப்புற வீழ்ந்தோமே எனினும்
கண்ணைக் குத்திக்கொண்ட எம்மை
அணைக்க முனைவதும்
இந்திய மக்களே!
ஈழமொன்று அமைவதானால்
பச்சைக்கொடி காட்டவேண்டியவர்கள்
அணுவாயுதத்தால் அண்டத்தையே அதிரவைத்த
ஆசியாவின் வல்லரசு
இந்திய மக்களே!
கல்லைப் பார்த்து காலை வைக்காமல்
அடித்துவிட்டதே கல்லென
கல்லை நொந்து கொள்வதில்
என்ன நியாயம்!
ஆழம் பார்த்துக் கால் வைக்காமல்
ஆழ்ந்தபின் ஆழ்ந்து விட்டோமேயென
நொந்து கொள்வதில்
பயனேது!





