
ஓ தமிழீழமே !
உன்னை நேசித்ததால்
உயிரைத் துறந்த
உதிரத்தை வார்த்த
உடமைகள் இழந்தவர்கள்
ஏராளம் ஏராளம் ஏராளம்!
இன்றும் இன்னும்
தெருவிலே வேட்டொலி
சொறிநாயிலும் கேடாய்
ரெத்தம் சொட்ட
துடிக்குது மானிடம்!
அப்பாவென்றும்
அம்மாவென்றும்
அண்ணனென்றும்
அக்காவென்றும்
தம்பியென்றும்
தங்கையென்றும்
ஓலமிடுதே ஈழதேசம்!
துப்பாக்கி கலாசாரம்
துளிர்த்ததால்
வேண்டாம் போர்
நிம்மதியே போதுமென
ஒதுங்கியோர் பலர்!
சொந்த இனத்துக்குள்ளே
குரோதம் வளர்ந்து
குறி வைப்பதும்
கொன்றொழிப்பதும்
வாடிக்கையானதால்
இரத்தத்தில் தோய்ந்ததே
ஈழ பூமி!
----------------களத்துமேடு-----


0 பின்னூட்டங்கள்::
Post a Comment