தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

வானவில்

பூகோளத்தின் பிரதிபலிப்போ
பூத்திருக்கும்
வர்ணக் கற்றைகள்!

மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!

வானில் காவடி வடிவில்
கண்ணைக் கவரும்
ஸப்த வர்ணங்கள்!

ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!

- ஈழவன் -

3 பின்னூட்டங்கள்::

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

வர்ணங்களின் கலவையோ
வையகத்தின் நிறமதோ
வந்தவுடன் மனம் துள்ளல் கொள்ளும்
வண்ண வண்ண வடிவதோ

மழையோடும் வெயிலோடும்
உறவாடி உயிரானாய்
உன்னழகில் உறைந்துவிட்டேன்
உணர்வுகளை தொலைத்து விட்டேன்

என்ன விலை அழகே நீ
சொல்லிவிடு வாங்கிடுவேன்
சொர்க்கத்தின் சுகத்தினையும்
உன் அருகில் அடைந்திடுவேன்

நீள்வட்டம் அரைவட்டம்
இது தானே உன் வடிவம்
நில்லாமல் ஓடிடுறாய்
உன் என்னை பாராமலே

வாரத்தில் மாதத்தில்
எப்போதோ நீ வருவாய்
உன் வரவை பார்ப்பதற்காய்
காத்திருக்கேன் தினம் நானும்

எனக்குள்ளே குதூகலிப்பேன்
எண்ணி எண்ணி தினம் மகிழ்வேன்
உன் அழகை கண்டு விட
என்னில் நான் கண் கொண்டேன்

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

மே. இசக்கிமுத்து said...

எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......